தி.மு.க.,மருத்துவ அணி சார்பில் ரத்த தான முகாம்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமிற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் வல்லபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சி துணை பொது செயலாளருமான ராஜா ரத்த தான முகாமினை தொட ங்கிவைத்தார். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சரவணன் தலை மையிலான செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர்.
இதில் 100 யூனிட் ரத்தம் சேகரி க்கப்பட்டு பெர ம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்க ப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜா, போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ரத்த தானம் வழங்கிய 100 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மருத்துவ அணி மாவட்ட நிர்வாகிகள் ஜெயலட்சுமி, கருணாநிதி, தனபால், பாலச்சந்தர், சுதாகர், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், வக்கீல் ராஜே ந்திரன், முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவச ங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.