உள்ளூர் செய்திகள் (District)
கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
அகரம்சீகூர்,
கடலூர் மாவட்டம் மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகா( வயது25) என்பவரை காதலித்து திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷுக்கு அவரது பெற்றோர் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண்ணை வாலி கண்டபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்னேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.