பெரம்பலூரில்பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி
- பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி
- பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள்
பெரம்பலூர்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தின் மூலம்பெண்களுக்கான தையல்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது.
மேலும் இப்பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப்பாவாடை , யூனிஃபார்ம்ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர் , பேபி ஃபிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.
பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள் பயிற்சிநேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை. பயி ற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் கா லை,மாலை தேனீர்வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் , பான் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்டோபர் 18-ந் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.