உள்ளூர் செய்திகள் (District)

பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

Published On 2023-11-01 08:58 GMT   |   Update On 2023-11-01 08:58 GMT
  • ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
  • சாத்தனூர் ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது

குன்னம், 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் காரை மற்றும் சாத்தனூர் ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என். கே கர்ணன் தலைமை தாங்கினார் . முன்னதாக காரை மற்றும் சாத்தனூர் ஊராட்சிகளில் நடந்த பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பா. மோகன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளை ஆய்வு செய்தனர். மேலும் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் முத்துசாமி, பாசறை செயலாளர் இளஞ்செழியன் ,முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா, ஆலத்தூர் துணை சேர்மன் சுசீலா, காரை கலையரசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாணவரணி ராஜா, இளைஞர் அணி நாகராஜ் ,தகவல் ஐ.டி. விங் கதிர்வேல், ஒன்றிய பேரவை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம் ,பொறியாளர் பிரபாகரன், சாத்தனூர் தமிழ்ச்செல்வன், வக்கீல்கள் பெரியசாமி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பிலிமிசை பழனிமுத்து நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக கர்ணன் ஏற்பாடு செய்திருந்தார் .நிகழ்வில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News