உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-09-22 09:18 GMT   |   Update On 2023-09-22 09:18 GMT
  • அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர்
  • ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறை சேர்ந்தவர் அன்பில். டிரைவர்.

இவரது மகன் ஜீவன் ராஜா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

ஜீவன்ராஜா கடந்த ஒரு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை யடுத்து அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளிக்கு சென்று மாற்றுச்சான்றிதழ் வாங்கினர்.

பின்னர் அவரை சோலையாறு அணை பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க திட்டமிட்டு இருந்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜீவன்ராஜா திடீ ரென எலி மருந்தை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி யடைந்தனர்.

உடனடியாக அவர்கள் ஜீவன் ராஜாவை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவ ருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜீவன் ராஜா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News