உள்ளூர் செய்திகள் (District)

மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்கு

Published On 2023-11-08 10:04 GMT   |   Update On 2023-11-08 10:04 GMT
  • தருமபுரி மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது
  • ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள அனுமந்தநகர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதியமான்கோட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி மாணவியை நல்லம்பள்ளி கீ்ழ்பூரிக்கல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(27). ஆட்டோ டிரைவர் என்பவர் தனது ஆட்டோவில் அடிக்கடி பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதில் அவருக்கும் மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் சென்று மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து பல முறை மாணவியை தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி குழந்தைகள் நல குழுமத்தில் புகார் தெரிவித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் படி மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.  

Similar News