பொள்ளாச்சியில் விவசாயியிடம் செல்போன், பணம் பறித்த வாலிபர் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மாரிமுத்து பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போனை பறித்தனர்.
- போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராசாக்கா பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தனது தோட்டத்துக்கு சென்றார்.
மொபட் பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் சென்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மாரிமுத்து பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போன், 1,160 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்தனர்.
இதில் நிலை தடுமாறி மாரிமுத்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் செல்ல முயன்ற ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை நெகமம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாப்பாளையத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (27) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய கோட்டூரை சேர்ந்த ரமேஷ் (28) என்பவரை தேடி வருகிறார்கள்.