உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முத்துப்பேட்டையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-05 09:15 GMT   |   Update On 2023-08-05 09:15 GMT
  • செல்போன் டவரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறி கோஷம் எழுப்பினர்.
  • டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருத்துறைப்பூண்டி:

முத்துப்பேட்டை தெற்கு தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க பணிகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் டவரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறி கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News