உள்ளூர் செய்திகள் (District)

கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது

Published On 2023-05-13 06:46 GMT   |   Update On 2023-05-13 06:46 GMT
  • கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை:

கறம்பக்குடி வாணியத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 62). இவருக்கு சொந்தமான குடோனில் இருந்த தாமிர கம்பிகளை காணவில்லை. இது குறித்து அவர் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் தாமிர கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.



Tags:    

Similar News