உள்ளூர் செய்திகள் (District)

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2023-04-23 06:19 GMT   |   Update On 2023-04-23 06:19 GMT
  • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யபட்டனர்
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-டிவிசன் சிறப்பு போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்த பகுதியில் சூதாடி கொண்டிருந்த மலைக்குடிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 35), மாரிமுத்து (29), செல்வம் (32), ஜெயக்குமார் (26), வடிவேல் (39), தமிழன் (50) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.490 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News