உள்ளூர் செய்திகள் (District)
மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம் நடைபெற்றது
- தேசிய அடையாள அட்டை ெபறுவதற்கு
புதுக்கோட்டை:
மாற்றுத்தி றனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த மத்திய அரசால் வழங்கும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம் பெரும் முகாம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவ குழுவின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் கண்டறிந்து, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளிநலத்துறை அலுவலர் உலகநாதன், பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர்.
இதில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தனர்.