உள்ளூர் செய்திகள் (District)
- புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது
- அனைத்து வகையான நோய்களுக்கும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ராசியமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை பல்நோக்கு சேவை மையம் மற்றும் எழுதுவோம் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் புற்று ேநாய் பரிசோதனை முகாம் பல்நோக்கு சேவை மையத்தின் இயக்குனர் யாகப்பா ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனைத்து வகையான புற்று நோய்களும் கண்டறிவதற்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.