உள்ளூர் செய்திகள் (District)

6.51 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

Published On 2023-02-14 06:43 GMT   |   Update On 2023-02-14 06:43 GMT
21-ந் தேதி வழங்கப்படும என்று மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1-19 வயதுடைய 5,23,811 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 1,27,870 மகளிருக்கும் என மொத்தமாக 6,51,681 பேருக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார்கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர்மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி வழங்கப்படும்.குழந்தைகள் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நன்றாகவும் பள்ளி வருகையில் முன்னேற்றமும் இருக்கும் என்பதால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் இம் மாத்திரையினை உட்கொண்டு நல் ஆரோக்கியத்தினை பெற்றிடும்படி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொ ண்டுள்ளார்.

Tags:    

Similar News