உள்ளூர் செய்திகள் (District)

மருத்துவ முகாம்

Published On 2023-03-19 07:47 GMT   |   Update On 2023-03-19 07:47 GMT
  • கலைஞர் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் வெள்ளூர் ஊராட்சியில் நடைபெற்றது
  • ஏராளமானவர்கள் பங்கேற்றனர்

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மணமேல்குடி தாலுகா வெள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சித்த மருத்துவம், கண் பரிசோதனை, காசநோய், மதுமேகம் (சுகர்),இரத்த அழுத்தம், பல், காது, மூக்கு, தொண்டை ஆகியவ ற்றிற்கான நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.மேலும் மேல் சிகிச்சை தேவைப்படு வோருக்கு மாவட்ட தலைமை மருத்து வமனைக்கு சிபாரிசு செய்ய ப்பட்டது. அதனை தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று க்கொண்டார். அதே போன்று கரகத்திக்கோ ட்டையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் கோரிக்கை களை கேட்டறிந்து அவர்க ளிடம் மனுகளைப் பெற்று க்கொண்டார்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வா கிகள், அரசு அலுவலர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News