உள்ளூர் செய்திகள் (District)
- ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்
- அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் உள்ள அங்காளம்மன் மற்றும்வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான்கொல்லை, கடு க்காக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் விநாயகர் கோயிலி ல் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்து வந்தனர். மேள தாள இசை முழக்கத்தோடு வந்த இந்த ஊர்வம்அங்காளம்மன் கோயில் வந்தடைந்தது. அங்கு குதிரை நடனத்துடன் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.