உள்ளூர் செய்திகள் (District)

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-14 06:33 GMT   |   Update On 2022-07-14 06:33 GMT
  • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

புதுக்கோட்டை:

அறந்தாங்கி தாலுகா பெருங்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி யாகசாலை அமைத்து கடந்த 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மூன்று கால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மன் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News