உள்ளூர் செய்திகள் (District)

முதியவர் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல எதிர்ப்பு

Published On 2022-09-03 08:26 GMT   |   Update On 2022-09-03 08:26 GMT
  • முதியவர் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்
  • போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்களம் கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே போன்று வீரமங்களம்காமராஜர் நகரில் 70க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை வழக்கமாக மாற்று ஊராட்சியான, பொன்னாலூர் வயல்காடு பகுதியில் தூக்கிச் செல்வார்கள். தற்போது பெய்ததால், அவ்வழியாக ரதவாகனம் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் காமராஜர் நகரை சேர்ந்த கந்தையா (வயது71) என்பவர் நேற்று இரவு இயற்கை மரணம் அடைந்தார். அதனையடுத்து அவரது உடலை காமராஜர் நகரிலிருந்து பெரியவீரமங்களம் வழியாக எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் ஆயத்தமாகியுள்ளனர். அதற்கு வீரமங்களம் பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை தொடர்ந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தினை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதையடுத்து இறந்தவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீரமங்களம் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News