கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் தின விழா
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது
- மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணை தலைவி வேதநாயகி, ஆசிரியர்கள் அலெக்ஸாண்டர், கண்ணன், ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.
அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா, செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து உரையாற்றினர். மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக அனைவரையும் ஆனந்தராஜ் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, கௌரி, தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.