உள்ளூர் செய்திகள் (District)

கந்தர்வகோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பொதுக்கூட்டம்

Published On 2022-08-17 09:34 GMT   |   Update On 2022-08-17 09:34 GMT
  • எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
  • பொதுக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட தலைவர் ஸலாஹுதீன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

புதுக்கோட்டை :

கந்தர்வகோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டுபேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு கந்தர்வகோட்டை நகரச் செயலாளர் முஹம்மது அன்சாரி தலைமை தாங்கினார்.மாவட்ட, தொகுதி, நகர கிளை, நிர்வாகிகள் மற்றும் ஜமா அத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

பொதுக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட தலைவர் ஸலாஹுதீன், மகளிர் அணி மாநில செயலாளர் தஸ்லிமா ெஷரிப்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிறைவாக நகரத் தலைவர் ஷேக் முகமது நன்றி கூறினார்.

Tags:    

Similar News