உள்ளூர் செய்திகள் (District)

தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

Published On 2023-10-05 04:49 GMT   |   Update On 2023-10-05 04:49 GMT
  • கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்
  • பொதுப்பாதையை ஆக்கிரமித்ததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுப் பாதையை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் பட்டா பெற்றுக் கொண்டு வேலி அமைத்ததால் கிராம மக்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.இது தொடர்பாக கலெக்டர், ஆர் டி ஓ, தாசில்தார் என்று அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து தங்களுக்கு பாதை ஏற்படுத்தி தரும் வரை தாலுகா அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவுறுத்தனர்.அதன்படி நேற்று 100க்கும் மேற்பட்ட மக்கள் குடம் சமையல் பாத்திரம் தலையணை மற்றும் உடமைகளுடன் தாலுக்கா அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து தாசில்தார் ராமசாமி இன்ஸ்பெக்டர் செந்தூர பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News