உள்ளூர் செய்திகள் (District)

ஆலங்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Published On 2022-07-24 09:25 GMT   |   Update On 2022-07-24 09:25 GMT
  • மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்ட சிறப்பு முகாமை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தொடங்கி வைத்தார்.
  • ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தேதி வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்ட சிறப்பு முகாமை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தொடங்கி வைத்தார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் லோகநாதன், ஜெகன், முருகன், சிவகுமார், லலிதா, வனிதா ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் தொடங்கியது. முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

இதில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags:    

Similar News