உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2023-05-08 08:37 GMT   |   Update On 2023-05-08 08:37 GMT
  • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலங்குடி வடகாடு முக்கத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அம்மன் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News