உள்ளூர் செய்திகள் (District)

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2023-05-02 07:05 GMT   |   Update On 2023-05-02 07:05 GMT
  • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
  • இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் மகன் கேசவன் (வயது 22). இவர், விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலை தெப்பக்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இறங்கிய போது, அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News