உள்ளூர் செய்திகள் (District)
ஆலங்குடி காவல் நிலையத்தில் மகளிர் தின விழா
- கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
- மகளிர் போலீசார் புத்தாடை உடுத்தி கலந்து கொண்டனர்
ஆலங்குடி,
ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொள்ள ஆலங்குடி மற்றும் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார் அனைவரும் வந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண் போலீசார் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். மகளிர் போலீசார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டினர். சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், லதா, நதியா, மற்றும் மாவட்ட எஸ்பி. தனிப்பிரிவு வெங்கடேஷ், மற்றும் மணிரெத்தினம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது.