உள்ளூர் செய்திகள் (District)
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
- பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
- ஆலங்குடி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கும்மங்குளத்தை சேர்ந்த பிலிப் மகன் ஜெஸ்டின்ஜெயராஜ் (வயது 45). இவர் சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்க வேண்டிய பூச்சி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெஸ்டின்ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சபம்வம் குறித்து அவரது மனைவி நட்சத்திர மேரி கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.