உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

Published On 2022-10-05 08:25 GMT   |   Update On 2022-10-05 08:25 GMT
  • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது
  • புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி சார்பில்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி சார்பாக 1-வது வார்டு நரிமேடு பகுதியில் இல்லம் தேடி இளைஞரணி சேர் க்கை முகாம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நகரச் செயலாளர் செந்தில் முன்னிலையில் நடைப்பெற்றது. தி.மு.க. இளைஞர் அணியை வலுப்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் முதற்கட்டமாக 42 நகராட்சி வார்டுகளில் இளைஞரணியில் இளைஞர்களை அதிகபடியாக சேர்க்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, புதுக்கோட்டை எம்.எல்.ஏ.முத்துராஜா, நகரச் செயலாளர் செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், கீரை.தமிழ்ராஜா, சுப.சரவணன், மாவட்ட பொருளாளர் லியாகத்அலி, மாவட்ட அவைதலைவர் அரு.வீரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், துணை அமைப்பாளர் நடராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் செல்லத்துரை, எட்வர்ட் சந்தோசநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், பழனிவேலு, பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி புதுநகர் குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்தனர்.

Tags:    

Similar News