மாணவ-மாணவிகள் முழுமையாக கல்வி கடன் பெறுவது உறுதி
- 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்கப்பட உள்ளது
- இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் கைக்குறிச்சியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது ,
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரிய அளவில் கல்வி கடன் வழங்கும் முகாம் தற்போது நடைபெற்று வருகிறது .இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்கப்பட உள்ளது .தற்பொழுது வித்யா லட்சுமி போர்ட்டல் என்ற முறையில் மாணவர்களுக்கு கல்வி கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கிக்கு நேரடியாக அனுப்பி வங்கி மூலம் மாணவ,மாணவிகளை அழைத்து உரிய ஆவணங்களை சரிபார்த்து கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகளுக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்க இ- சேவை மூலமாக ஆவணங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கல்வி கடன் வழங்க அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளோம். இது சில வங்கி மேலாளருக்கு புரிதல் இல்லாமல் உள்ளது .எனவே அவர்களுக்கும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளோம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த முறை மாணவ ,மாணவிகள் முழுமையாக கல்வி கடன் பெறுவது உறுதி என்றார் பேட்டியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் பலர் இருந்தனர்.