உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் ரெயில்வே பணியாளர் தற்கொலை

Published On 2023-04-12 09:18 GMT   |   Update On 2023-04-12 09:18 GMT
  • ரெங்லால் மீனா கடந்த ஒரு வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
  • 2 நாட்கள் ஆகியும் வீட்டின் கதவு திறக்காமல் இருந்தது.

கோவை,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரெங்லால் மீனா (25). இவர் சோமனூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு போத்தனூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் இவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள கடையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் 2 நாட்கள் ஆகியும் வீட்டின் கதவு திறக்காமல் இருந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கரும்மத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News