உள்ளூர் செய்திகள் (District)
மானாவாரி பயிர் மேம்பாடு பயிற்சி முகாம்
- மானாவாரி பயிர் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரிமாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், இராமியம்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் அட்மா திட்டத்தின்கீழ் மானாவாரி பயிர் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஷ்வரி கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
வட்டார தொழிநுட்ப மேலாளர் ரவி வரவேற்று உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார்.
கால்நடை டாக்டர் கவுதமன் கோடைக்காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பெரியசாமி, ரேணுகா ஆகியோர் செய்திருந்தனர்.