உள்ளூர் செய்திகள்

கீழக்கரை அருகே 3-வது திருமணம் செய்த விவசாயி கொலை

Published On 2023-01-04 08:01 GMT   |   Update On 2023-01-04 08:01 GMT
  • கீழக்கரை அருகே 3-வது திருமணம் செய்த விவசாயி கொலை செய்யப்பட்டார்.
  • இதில் 2-வது மனைவி-மகன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தை சேர்ந்தவர் வையக்கிளவன் (வயது 58), விவசாயி. இவர் முதலாவதாக காளிமுத்து என்ற பெண்ணை திரு மணம் செய்துவிட்டு அவர் மதம் மாறி பிரிந்து சென்று விட்டார்.

பின்பு வையக்கிளவன் 2-வதாக சுமைதாங்கியை சேர்ந்த சுப்புலட்சுமியை (54) திருமணம் செய்து அவர்களுக்கு பாண்டிஸ்வரி என்ற மகளும், வசீந்திரன், கனி என்ற மகன்களும் உள்ள னர். பின்பு இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகன்கள் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் 3-வ தாக வெள்ளாவைச் சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண்ணை வையக்கிளவன் 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

நேற்று வையக்கிளவன் காலி இடத்தை கழிவறையாக பயன்படுத்தினாராம். இதை 2-வது மனைவி சுப்புலட்சுமி கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு அருகில் கிடந்த பனைமட்டையை எடுத்து வையகிளவன் தாக்கினார். இதில் சுப்புலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது.

இதை அறிந்த மகன் வசீந்திரன், வையகிளவன் வீட்டிற்குள் வந்து தகாத வார்த்தையால் பேசி, கம்பால் வலது பக்க மார்பில் குத்தினார். இதை தடுக்க வந்த 3-வது மனைவி ராமலட்சுமியையும் அடித்து காயப்படுத்திவிட்டு தப்பி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

காயமடைந்த வையக்கிள வனை மைத்துனர் பாலகிருஷ்ணன், அதே ஊரைச் சேர்ந்த ரவி, ஆனந்தராஜ் ஆகியோர் ஆட்டோவில் ஏற்றி கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் விசாரணை நடத்தினார். தாய், மகன் இருவரையும் போலீசார் கைது செய்து மதுரை மற்றும் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News