உள்ளூர் செய்திகள்

வீரசக்தி கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2022-07-09 09:02 GMT   |   Update On 2022-07-09 09:02 GMT
  • தொண்டி அருகே உள்ள வீரசக்தி கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
  • பக்தர்கள் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே அடுத்தகுடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூக்குழி உற்சவ திருவிழா வையொட்டி ஏராளமான பக்தர்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள்உள்பட 2,500க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் நடைபெற்றது. மாவிளக்கு ஏற்றியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.தீமிதி திருவிழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திருவாடானையில் இருந்து ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவிழாவின்போது சில பக்தர்களிடம் இருந்து மர்ம நபர்கள் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் திருவிழாவின் போது திருட்டு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தவும், போக்குவரத்து நெரிசலை தவிக்க கூடுதலாக பஸ் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News