உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2023-05-16 07:48 GMT   |   Update On 2023-05-16 07:48 GMT
  • ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமையேற்று பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வீட்டுமனைபட்டா, முதியோர்உதவித்தொகை, பட்டாபெயர்மாற்றம் உள்ளிட்டகோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன. இதில் கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News