உள்ளூர் செய்திகள் (District)

81 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2023-11-01 07:29 GMT   |   Update On 2023-11-01 07:29 GMT
  • கடைகளுக்குc
  • போலீசார் சோதனையில் நடவடிக்கை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்படி, மாவட்டம் முழுவதிலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நேற்று கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது அரக்கோணம், வாலாஜா, சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் 81 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வருவாய்த்து றையினர் மூலம் கடைக ளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News