உள்ளூர் செய்திகள் (District)

நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வாலிபர்

Published On 2023-11-10 08:25 GMT   |   Update On 2023-11-10 08:25 GMT
  • வாணியம்பாடி கோர்ட்டு வளாகத்தில் நடந்தது
  • தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்

ஆலங்காயம்:

வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் நகினாதபசூம். இவருக்கும் சையது முனவர் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகினாதபசூம் ஜீவானம்சம் கேட்டு வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று நகினா தபசூம் கோர்ட்டுக்கு வந்த போது அவரை, கணவர் சையத் முனவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோர்ட்டு வளாகத்தில் வைத்து தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். பின்னர் இதுதொடர்பாக நகினா தபசூம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சையத் முனவர் உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாரூக் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவர் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News