உள்ளூர் செய்திகள் (District)
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியின் அவசரக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கோபிநாதன், துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடப்பு ஆண்டில் அம்மூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்ப ட்டுள்ளது.
இதன்படி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பயனாளிகளை தேர்வு செய்ய கணக்கெடுப்பு பணிகள் மேற்கொ ள்வது, நீர் நிலைகள், நீர்வ ரத்து கால்வாய் பணிகள் மேற்கொ ள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.