உள்ளூர் செய்திகள் (District)

கலெக்டர் வளர்மதியிடம் பேட்டரி வாகனத்தை எம்.ஆர்.எப். அதிகாரிகள் ஒப்படைத்த காட்சி.

ரூ.6 லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனம்

Published On 2023-11-05 08:42 GMT   |   Update On 2023-11-05 08:42 GMT
  • எம்.ஆர்.எப் தொழில் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது
  • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வழங்கினர்

ராணிப்பேட்டை:

அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.எப் தொழில் நிறுவனத்தின் சார்பில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மற்றுத்திற னாளிகள் மற்றும் முதியோர்களின் சிரமத்தை குறைக்க ரூ.6. லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம், எம்.ஆர்.எப். நிறுவன முதுநிலை பொது மேலாளர் தீபக் மேத்யூ, பொது மேலாளர் ஜான் டேனியல் ஆகியோர் பேட்டரி வாகனத்தை வழங்கினர்.

கலெக்டர் அலுவல கத்திற்கு மனு அளிக்க வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளின் வசதிக்காக அலுவலக நுழைவாயிலில் இருந்து அலுவலக வாயில் வரை அழைத்து செல்வதற்காக எம்.ஆர்.எப்.நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் எல்வின், நிறுவன சமூகப் பங்களிப்பு ஒருங்கி ணைப்பாளர் கஜேந்திரன். மனிதவள மேலாளர் பால் மற்றும் அலுவலக மேலாளர் பாபு உள்பட , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News