உள்ளூர் செய்திகள் (District)
- வாகன தணிக்கையில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ரத்தினகிரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருசக் கரவாகன திருட்டை தடுக்க ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையினான போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆற்காட்டில் உள்ள கண் ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழி யாகமோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 41) என்பதும், இவர் ரத்தினகிரி பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திரு டியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.