உள்ளூர் செய்திகள் (District)
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்
- நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- பா.ம.க. நகர செயலாளர் தலைமையில் நடந்தது
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் பா.ம.க. சார்பில் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட நகர,ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நரேஷ் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க வின் மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில மாணவர் சங்க செயலாளர் வக்கீல். ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் ரவி , ரஜினி சக்கரவர்த்தி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.