உள்ளூர் செய்திகள் (District)
மருத்துவ மாணவர்களுக்கு புத்தகங்கள்
- அமைச்சர் காந்தி வழங்கினார்
- மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த கல்விஆண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இதில் 8 பேருக்கு முதலாம் ஆண்டு படிப்பிற்கு தேவையான பாட புத்தகங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,விஸ்வாஸ் பள்ளியின் தலைவர் கமலா காந்தி ஆகியோர் தங்கள் சொந்த செலவில் வழங்கினர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் அலுவலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.