உள்ளூர் செய்திகள் (District)
ஜலநாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
- 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜலநாதீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்ச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து.
ஜலநாதீஸ்வரர் தினம் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளினார். சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜலநாதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு மாத விதிகளில் தேர் வளம் வந்து மாலை மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுங்கிலும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.