உள்ளூர் செய்திகள் (District)

தயிர் விற்பது போல வந்து வீட்டில் திருட முயற்சி

Published On 2023-11-05 08:44 GMT   |   Update On 2023-11-05 08:44 GMT
  • ஆடைகள் கலைத்து பணம் உள்ளதா என தேடினார்
  • மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அடுத்த அகரம் சாலை பகுதியில் விஜயராகவன் என்பவர் வீடு உள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் வீட்டுக்குள் சென்றதாக கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்விஜயராகவன் வீட்டை ஆய்வு செய்தனர்.

அதில் வெளியில் இருந்து வீட்டின் பூட்டை சுத்தியால் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கதவை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் ஜன்னலை திறந்து அதன் வழியாக சிலாvப்பில் இருந்த பெட்டியை இழுத்து அதிலி ருந்த வீட்டு பத்திரங்கள், ஆடைகள் உள்ளிட்ட வைகளை கலைத்து பணம் உள்ளதா என தேடினார். மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் வெளியில் உள்ள கேட்டை உடைத்ததாகவும் அப்போது அங்கு யாரோ கூச்சலி ட்டதில் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

அருகில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கைபையை மாட்டி கொண்டு மர்மநபர் வருவது போன்ற காட்சிகள் இருந்தது.

தயிர் பாக்கெட்

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். மர்ம நபர் காலையில் தயிர் பாக்கெட் கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக விற்பனை செய்து வருவதாக கூறினர்.மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News