உள்ளூர் செய்திகள் (District)

மின்சாரம் தாக்கி பசு மாடு பலி

Published On 2023-04-26 06:51 GMT   |   Update On 2023-04-26 06:51 GMT
  • அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்த வர் பாபு. இவரது பசு மாடு வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.

அங்கு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. மேய்ந்து கொ ண்டிருந்த பசுமாடு எதிர்பாராத விதமாக மின் கம்பியில் சிக்கிக்கொண்டது.

அதில் கசிந்த மின்சாரம் பாய்ந்த தில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் பசுமாட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News