உள்ளூர் செய்திகள் (District)

லாரி மோதி மின் கம்பங்கள் சேதம்

Published On 2023-10-31 09:47 GMT   |   Update On 2023-10-31 09:47 GMT
  • அசம்பாவிதங்களை தடுத்திட போக்குவரத்துக்கு தடை
  • மின்கம்பம், மின் கம்பிகளை போலீசார் அகற்றினர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் சென்னை பெங்களூர் அதிவிரை வுச்சாலை பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன இதற்கான சாலை போடும் பணியில் அதிக அளவில் வட மாநில தொழிலாளா்கள் ஈடு படுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் சாலை போடுவதற்காகா நாள் ஒன்றுக்கு 500 -க்கும் மேற்ப்பட்ட டிப்பா் லாரிகளில் மண் கொண்டு வந்து நிரப்பி வருகின்றனா்.

நேற்று மாலை 6.30 மணியளவில் வழக்கம் போல் மண்ணை கொட்டிவிட்ட வந்த டிப்பா் லாரி லாரியின் பின் பகுதியை கீழே இறக்காமல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பாணாவரம் - காவேரி ப்பாக்கம் சாலையில், சாலை ஓரம் இருந்த மின் ஒயர்களை லாரியின் பின் பக்க பகுதி இழுத்து வந்துள்ளது. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் தூக்கி வீசப்பட்டு பாணாவரம் - காவே ரிப்பாக்கம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

இதனிடையே சாலையில் விழந்த மின்கம்பத்தால் மின் கம்பிகள் ஆங்காங்கே தொங்கியது . இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாணாவரம் மற்றும் போலீசார், பாணாவரம் துனை மின் நிலைய போர்மேன் விஜயகுமார், காமராஜ், சா்தாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட மின் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அசம்பாவிதங்களை தடுத்திட போக்கு வரத்துக்கு தடைவித்து சாலையின் நடுவே விழுந்து கிடந்த மின்கம்பத்தையும், மின் கம்பிகளையும் அகற்றினர். ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக ஏற்ப்பட்டிருந்த போக்குவரத்தை சீா் செய்தனா்.

இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் டிப்பா் லாரி டிரைவர் உத்திர பிரதேசத்தை சோ்ந்த ஷியாம் சிங் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News