தி.மு.க. சுற்றுசூழல் அணி சார்பாக மரகன்று நட்டனர்
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தி.மு.க மற்றும் சுற்று சூழல் அணி சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நேற்று பாணாவரம் சந்தைமேட்டு பகுதியில் நடைப்பெற்றது.
காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
துணை அமைப்பாளா்கள் ராஜேஷ்,அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தி.மு.க காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளா் தெய்வசிகாமணி, மாவட்ட துணைசெயலாளா் துரைமஸ்தான், மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர், பாணாவரம் ஊராட்சிமன்ற தலைவர் அா்ஜீனன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
மேலும் பாணாவரம் வாரசந்தை பகுதியில் வேப்பம், பூங்கை உள்ளிட்ட 9 வகையான 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதில் திமுக காவேரிப்பாக்ம் ஒன்றிய துணை செயலாளா் சங்கா், பொருளாளா் ரவி, மாவட்ட பிரிதிநிதி பாஸ்கா், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சுமன், சாமு, பாணாவரம் ஊராட்சிமன்ற துணைதலைவர் சரண்யா, ஓய்வு பெற்ற முன்னால் தலைமை ஆசிரியை ஜெகதாம்பாள், பாணாவரம் கிளை கழக பொருப்பாளா் பாலன், ஆசிரியர் சரவணன், வார்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.
பாணாவரம் முன்னால் ஒன்றியகுழு உறுப்பினா் சரவணன் நன்றி கூறினாா்.