உள்ளூர் செய்திகள் (District)
- சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
வாலாஜா அடுத்த கீழ் விஷாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது57). இவர் நேற்று காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.