உள்ளூர் செய்திகள் (District)

முதியவர் தற்கொலை

Published On 2023-11-29 09:17 GMT   |   Update On 2023-11-29 09:17 GMT
  • உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை, காரை வீராசாமி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 66). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மன உளைச்சளுக்கு ஆளான சக்கரவர்த்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்கரவர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News