உள்ளூர் செய்திகள் (District)

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2023-11-28 08:13 GMT   |   Update On 2023-11-28 08:13 GMT
  • மின்சார சுவிட்சை கழற்றியபோது பரிதாபம்
  • போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் அடுத்த உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சம்பத் (வயது 45), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரது விவசாய நிலத்தில் நேற்று ஆழ்துளை கிணறுக்கான மின்சார சுவிட்சை கழற்றியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுக்குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News