மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
- 16 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, மாதத்தின் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும்.
நேற்று நடைபெற்ற இம்முகாமில் கலந்த கொண்ட 132 நபர்களில் 78 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டையும், 27 நபர்களும் முதல் -அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவும், மற்றும் 52 புதிய பயனாளிகளுக்கு யுடிஐடி போர்ட்டலில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 56 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியம் பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், செயற்கை கால் வேண்டி 4 நபர்களும், அறிவுசார் குறைபாடுயவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 19 நபர்களும், வங்கி கடன் வேண்டி 17 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 5 நபர்களும், சக்கர நாற்காளி வேண்டி 16 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.