குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவில் ஐ.ஜி. ஆய்வு
- ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசாருக்கு உத்தரவு
- கைப்பற்றப்பட்ட வாகனங்களை விரைவில் அப்புறப்படுத்த அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை பிரிவில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்துவதை தடுக்கவும், ரெயில் மூலம் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், மாநிலம் மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் அரிசி கடத்தலை தடுக்க சோதனைகளையும்,ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அரசுக்கு பறிப்பிழக்கம் செய்து விரைவில் அப்புறப்ப டுத்தவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு வேலூர் சரக டி.எஸ்.பி நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.