உள்ளூர் செய்திகள் (District)

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நன்னீராட்டு விழா

Published On 2023-11-19 08:41 GMT   |   Update On 2023-11-19 08:41 GMT
  • மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
  • கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைவ்பஜார் பகுதியில் உள்ள, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விநாயகர் சன்னதி, நவகிரகங்கள், துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.

இதனை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

காலை 9 மணி அளவில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட தலைவர் லட்சுமணன், மகாத்மா காந்தி முதியோர் காப்பக துணை தலைவர் எஸ் ஆர் பி. பென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆற்காடு தொழிலதிபர் ஏவி.சாரதி, வேதபுரி, காளத்தி குமரவேல், திருஞானம் மோகன், மணி, தினகரன், கார்த்திகேயன், நரசிம்மன், தண்டபாணி, மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவின் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News